Oct 19 2008

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்……

என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது.

.
.
.

மூன்றாவது, “இறையாண்மை” குறித்து இடத்திற்கு இடம் மாறுபடும் வியாக்கியானங்கள். ஒரு நாட்டில் உள்ள இரு இனப்பிரிவுகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதோ…… விலகிக் கொள்வதோ அது அவை இரண்டும் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கும்போது தோன்றாத “இறையாண்மை” ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகும்போது மட்டும் தோன்றுவதுதான் நெருடலான துயரம்.

.
.
.

ஆனால்…… அடுத்து வந்த நாட்களோ……?
“இந்திய – இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசனை……”
“இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை……”
என நகர்ந்து இறுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் போய் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் போரிட்டுக் கொள்கிற இரு தரப்பாருக்குள் நிகழ வேண்டுமே அன்றி சமரசம் செய்யச் சென்ற நடுவரே உடன்படிக்கையில் கையெழுத்திடுவதென்பது உலகம் கண்டிராத விந்தை. அமைதிக்கான ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்க வேண்டும். சமரசம் செய்யச் சென்ற ராஜீவ்காந்தி அதில் சாட்சிக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதுதான் நியதி.

.
.
.

எல்லாவற்றுக்கும் மேலாய், இறுதியாக……
அண்டைநாடு…… பஞ்சசீலம்…… இறையாண்மை…… உள்நாட்டு விவகாரம்…… எல்லாம் தாண்டி “நேச” நாட்டுக் கடற்படையினரால் காவு வாங்கப்பட்ட “சொந்த” நாட்டு மீனவர்கள் மட்டும் இதுவரை ஐநூற்றுச் சொச்சம் பேர்.

“எதிரி” நாட்டு படையான பாகிஸ்தானியரால் கூட மீனவர்கள் எவரும் இப்படிக் கொல்லப்பட்டதில்லை.

இந்தியக் கடற்படையும் பாகிஸ்தானிய மீனவர்களை இப்படிக் கொன்றதில்லை.

அவ்வளவு ஏன்…… எதிரும் புதிருமான கியூபாவும் அமெரிக்காவும் கூட மீனவர்கள் விசயத்தில் இவ்விதம் நடந்து கொண்டதில்லை.

இங்கு மட்டும் ஏன் இப்படி?

இன்று மனசாட்சியுள்ள எவருள்ளும் எழும் கேள்வி இதுதான் :

அப்படியாயின்…… தமிழர்கள் என்பவர்கள் யார்……?

அவர்கள் ஈழத்தில் பிறந்திருப்பினும் சரி.
இந்தியாவில் பிறந்திருப்பினும் சரி.

நன்றி : சண்டே இந்தியன் வார இதழ்

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

Related posts:

  1. [புதினம்] யாரப்பா இங்க‌ இந்தியா தமிழனுக்கு உதவி செய்யிறது என்று சொல்லுறது? ஈழப் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் இரட்டை வேடமிடுகிறது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி...
  2. Pillai Raja Koopura foundation stone Dear all   Pillaiyaar Raja Koopura foundation stone laid...
  3. [NESOHR] Tamils Killed by Sri Lankan Forces February 22, 2002 – August 31, 2007 Complete report: Tamils Killed in Sri Lanka February 22,...
  4. Feeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி எனது வலைபதிவை சேர்ப்பதற்கு, உங்களின் தகவல் ஓடைத் திரட்டியைத் தெரிவுசெய்யுங்கள். Please choose...
  5. மன்மோகன்சிங்கை இறுக வளைத்திருக்கும் தமிழர் எதிர்ப்புக்குழு: சாடுகிறது இந்திய ஆங்கில ஊடகம் த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ்...

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly