Feb 05 2010
கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகி றார்கள் – ரில்வின் சில்வா
கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகிறார்கள் – ரில்வின் சில்வா
ந்தவிதமான அச்சமும் இன்றி பொதுமக்களை தெருக்களில் கொன்று குவித்தவர்கள்
இன்று வெள்ளையாடை அணிந்து பூத்தட்டுக்களை ஏந்திக் கொண்டு புத்தரைத்
தரிசித்துக் கொண்டு திரிவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்
ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற
செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இடி
அமினின் ஆட்சிக்கு ஒப்பான அராஜக ஆட்சியே இன்று நடைபெறுவதாகவும் தமக்கு
எதிரான எவரையும் கொன்றொழிக்கும் நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்
தமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினரைக் கொன்றவர்கள் அரச ஆதரவுடன்
சுதந்திரமாக நடமாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.