May 19 2010
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்து க்கு தற்கொலைபடை தாக்குதல் மிரட்டல் விடுக்க ப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளது.
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7941#7941
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு தற்கொலைபடை தாக்குதல்
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி வரும்
நிலையில், சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான சென்னை சென்டிரல் ரயில்
நிலையத்தை தற்கொலைபடையினர் எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற மிரட்டல்
வந்துள்ளது. இதனையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிர பரிசோதனைக்குப் பின்னர் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவதாகவும்,
ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்பட மோப்ப நாய்களின் உதவியோடு தமிழக
போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் அனைவரும் இதற்கு
சிறந்த முறையில் ஒத்துழைக்குமாறும், யாரும் பீதியடைய தேவையில்லை என்றும்
ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு கமிஷனர் கூறினார். மேலும்,
ரெயில்கள், நடைமேடைகள், ஓய்வு அறைகள் உள்பட ரயில் நிலையத்தின் அனைத்து
பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.